கினபாடங்கான் இடைத்தேர்தல்: காலஞ்சென்ற புங் மொக்தாரின் மகன் நைம் குர்னியாவான் வேட்பாளராக அறிவிப்பு!

கோலாலம்பூர்:

கினபாத்தாங்கான் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாரிசான் நேஷனல் (BN) கூட்டணியின் வேட்பாளராக, மறைந்த டத்தோஸ்ரீ புங் மொக்தார் ராடினின் மகன் நைம் குர்னியாவான் (Naim Kurniawan) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் மஸ்லான் கூறுகையில், பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி நேற்று இரவு கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பை வெளியிட்டதாகத் தெரிவித்தார்.

“நைம் குர்னியாவான் உள்ளூர் மக்களால் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வேட்பாளராகப் பார்க்கப்படுகிறார்” என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here