தங்காக்கில் பயங்கரம்: சக ஊழியரைத் துள்ளத் துடிக்கக் கொலை செய்த வியட்நாம் பெண் கைது

தங்காக் (TANGKAK), மார்ச் 17, 2026:

தங்காக்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தனது சக பெண் ஊழியரை கத்தியால் குத்திக் கொலை செய்த வெளிநாட்டுப் பெண்ணை, சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இன்று காலை சுமார் 8.40 மணியளவில் இந்த கொடூரச் சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. தொழிற்சாலையில் பணிபுரியும் 51 வயதான வியட்நாம் நாட்டுப் பெண் ஒருவர், கழுத்தில் பலத்த வெட்டுக் காயங்களுடன் மயங்கிக் கிடப்பது கண்டறியப்பட்டது.

“பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் மிக மோசமான காயங்கள் இருந்தன. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்று, மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்பரின்டெண்டென்ட் ரோஸ்லான் முகமட் தாலிப் கூறினார்.

கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே சந்தேகத்திற்குரிய பெண் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்டவரைத் தாக்கிய பிறகு, அந்தப் பெண் தன்னையும் காயப்படுத்திக் கொண்டதாகத் தெரிகிறது.

இந்த கொடூரக் கொலைக்கான உண்மையான காரணம் (Motive) குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் 302-வது பிரிவின் (கொலை) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here