சித்திரை புத்தாண்டு, வைசாகி மற்றும் விஷு கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பிரதமர் அன்வார் இப்ராகிம்

கோலாலம்பூர், ஏப்ரல் 14:

சித்திரை புத்தாண்டு (Chittirai Puthandu), வைசாகி (Vaisakhi) மற்றும் விஷு (Vishu) பண்டிகைகளைக் கொண்டாடும் தமிழ், சீக்கிய மற்றும் மலையாள சமூக மக்களுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

தமது முகநூல் (Facebook) பக்கத்தில் இந்த வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ள பிரதமர், இப்பண்டிகைகளைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் அமைதியும், நீண்ட ஆயுளும், இறைவனின் ஆசிகளும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

“நமக்குக் கிடைத்துள்ள இந்த பன்முகத்தன்மைதான், நம் அனைவரையும் பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலுடன் ஒன்றிணைக்கும் பிணைப்பின் அடித்தளமாகும்.” என்று தனது வாழ்த்து செய்தியில் மலேசியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், நாட்டின் செழிப்பையும் நல்லிணக்கத்தையும் உறுதி செய்ய, அனைத்து மலேசியர்களும் பொறுப்புணர்வுடன் தேசிய ஒற்றுமையைத் தொடர்ந்து பேணிக் காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பல சமூகத்தினர் தங்களது புத்தாண்டுப் பண்டிகைகளை ஒரே நாளில் கொண்டாடுவது, மலேசியாவின் தனித்துவமான கலாச்சார ஒற்றுமையைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here