கோலாலம்பூர்:
தனது மகள் பிரசன்னா டிக்சாவை மீட்பதில் காவல்துறை மெத்தனமாகச் செயல்படுவதாகக் கூறி, காவல்துறை தலைவருக்கு (IGP) எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர அனுமதி கோரி எம். இந்திரா காந்தி தாக்கல் செய்த மனுவின் மீது ஈப்போ உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.
கடந்த 17 ஆண்டுகளாகத் தனது மகளைப் பிரிந்து சட்டப் போராட்டம் நடத்தி வரும் 51 வயது இந்திரா காந்தி, தனது முன்னாள் கணவர் பத்மநாபன் அரசாங்க உதவிகளைப் பெற்று வருவதாகக் கூறப்படும் நிலையில், அவரைக் கண்டுபிடிக்கத் தவறிய காவல்துறையின் மௌனம் ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்தார்.
இக்கைது நடவடிக்கையை உறுதிப்படுத்துவதன் மூலம் தனது மகளை மீண்டும் சந்திக்கும் நம்பிக்கையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் குறிப்பிட்டுள்ளார்.
நீதித்துறையின் மீதான நம்பிக்கையுடன் காத்திருக்கும் இந்திரா காந்தி, ஒரு தாயின் போராட்டமாக இதனைப் பொதுமக்கள் கருதுவதற்குத் தனது நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.




















