அம்பாங்கில் நேற்று 1 மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பணம் காணாமல் போயிருக்கிறது. அம்பாங் பாயிண்ட் மாலில் உள்ள ஒரு வங்கியில் இருந்து பாதுகாப்பு நிறுவனத்தால் பணம் சேகரிக்கப்பட்ட பின்னர், மாலை 3.55 மணியளவில் சம்பவம் குறித்து போலீஸ் அறிக்கை கிடைத்ததாக அம்பாங் ஜெயா போலீசார் தெரிவித்தனர்.
ஒரு அறிக்கையில், அம்பாங் ஜெயா காவல்துறைத் தலைவர் அசாம் இஸ்மாயில், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 379 இன் கீழ் திருட்டு வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.


















