மலாக்காவில் குழாய் வெடித்ததால் உருவான திடீர் பள்ளம்! ஜாலான் செமாபோக் – ஆயர் குரோ சாலை மூடப்பட்டது

மலாக்கா:

மலாக்காவின் முக்கியச் சாலைகளில் ஒன்றான ஜாலான் செமாபோக் – ஆயர் குரோ (Jalan Semabok-Ayer Keroh) சாலையில், நிலத்தடி நீக்குழாய் வெடித்ததால் திடீரென ஒரு பெரிய பள்ளம் (Sinkhole) உருவானதைத் தொடர்ந்து, அந்தச் சாலையின் 20 மீட்டர் பகுதி போக்குவரத்துக்காக முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது.

மலாக்கா தெங்கா பொதுப்பணித்துறை (JKR) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று காலை 9 மணியளவில் ஃபெடரல் ரூட் 264 (Federal Route 264), பிரிவு 3.4-இல் உள்ள மஸ்ஜித் புக்கிட் பாயான் (Masjid Bukit Bayan) போக்குவரத்துச் சந்திப்புக்கு அருகே இந்தச் விபத்து நிகழ்ந்துள்ளது.

ஸ்ரீகாட் ஆயர் மலாக்கா பெர்ஹாட் (Syarikat Air Melaka Bhd – SAMB) நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தடி நீர்க்குழாய் ஒன்று திடீரென வெடித்து சிதறியதே, இந்த நிலச்சரிவு போன்ற பள்ளம் ஏற்படுவதற்குக் காரணம் என JKR உறுதிப்படுத்தியுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் அப்பகுதியில் நல்ல வானிலை நிலவியது குறிப்பிடத்தக்கது.

“முதற்கட்டப் பாதுகாப்பு நடவடிக்கையாக, விபத்து நடந்த இடத்தில் எச்சரிக்கைப் பலகைகளும், போக்குவரத்துப் திசைதிருப்பல் (Diversion) குறியீடுகளும் உடனடியாக நிறுவப்பட்டுள்ளன. சாலைப் பழுதுபார்ப்புப் பணிகள் முடிவடையும் வரை இந்தச் சாலை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும்,” என்று JKR தெரிவித்துள்ளது.

இந்தச் சாலை மூடலால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, வாகன ஓட்டிகள் அனைவரும் ஜாலான் டெமாங் ஹுசின் (Jalan Demang Husin – FT264) மாற்று வழிப்பாதையைப் பயன்படுத்துமாறு JKR மற்றும் சாலைப் பராமரிப்பு நிறுவனமான செலியா செலெங்காரா செல்தான் (Selia Selenggara Selatan Sdn Bhd) ஆகியவை அறிவுறுத்தியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here