பழைய சாதம் இருக்கா? வாங்க இட்லி தயாரிக்கலாம்

பலரின் வீட்டில்  சாதம் மீந்து போனால், அதை அடுத்த வேளைக்கு பயன்படுத்தாமல் வீணாக எடுத்து கொட்டுவது தான் வழக்கம்.

ஆனால் இனிமேல் அதை செய்யத் தேவையில்லை. வீட்டில் மீதமான சாதத்தை வைத்து இரண்டே நிமிடத்தில் பஞ்சு போல, எப்படி இட்லி மாவு தயாரிக்கலாம் என்பதைப் பற்றியும், அந்த இட்லிக்கு தொட்டுக்கொள்ள, இரண்டே நிமிடத்தில் சுவையான சட்னி எப்படி தயாரிக்கலாம், என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இட்லி செய்வதற்கு தேவையான பொருட்கள்: சாதம் ஒரு- 1 கப் ரவை-1/4 கப் தயிர்-1/4 கப் உப்பு-தேவையான அளவு இவ்வளவுதாங்க தேவையான பொருட்கள்.

இவை அனைத்தையும் அரைவை இயந்திரத்தில் ஒன்றாகப் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

தண்ணீர் நிறைய ஊற்றி விடக்கூடாது. கெட்டியான இட்லி மாவு பதத்தில் அரைத்து கொள்ளுங்கள். அரைத்த அந்த மாவை பத்து நிமிடங்கள் வரை அப்படியே வைத்துவிட்டு, அதன் பின்பு எப்பவும் போல், இட்லி சட்டியில், இட்லி ஊற்றி விடலாம். மாவு அரைத்து செய்த இட்லியை விட, இந்த இட்லி மிகவும் சுவையானதாக இருக்கும்.

இந்த இட்லிக்கு கூடவே, சுவையான சட்னியையும் இரண்டே நிமிடத்தில் தயார் செய்துவிடலாம்.

அது எப்படி? என்பதையும் தெரிந்து கொள்ளலாமா?

சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

 தேங்காய் துருவல்-1கப் பொட்டுக்கடலை-1/4 கப் வரமிளகாய்-2 சின்ன வெங்காயம்-2 பூண்டு-2 புளி-சிறிதளவு உப்பு-தேவையான அளவு,

 இவை அனைத்தையும் ஒன்றாக அரைவை இயந்திரத்தில் போட்டு மைய அரைத்து, கருவேப்பிலை, கடுகு, பெருங்காயம் தாளித்தால், இரண்டே நிமிடத்தில் காரசாரமான சட்னி ரெடி. சுட சுட பழைய சாதம் இட்லியோடு, இந்த சட்னியையும் சேர்த்து சுவைத்து பாருங்கள்.

குறைவான நேரத்தில் ருசியான காலை பசியாறல் தயார். இப்படி ஒருமுறை செய்தீர்கள் என்றால், திரும்பத் திரும்ப செஞ்சுகிட்டே இருப்பீங்க! அந்த அளவுக்கு ருசியாக இருக்கும்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here