டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தி கொலை – இருவருக்கு தடுப்பு காவல் நீடிப்பு

தொழிலதிபர் டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு இன்று தடுப்பு காவல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11 மணியளவில் அவர்கள் பெட்டாலிங் ஜெயா மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

ஒரு மலாய்க்காரர் மற்றும் டத்தோ அந்தஸ்து கொண்டுள்ள ஓர் இந்தியர் ஆகியோரிடம் மேல் விசாரணை செய்வதற்காக போலீசார் தடுப்பு காவலை நீடிக்க கோரியுள்ளனர்.

(updated)

இன்று காலை நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட இருவருக்கும் 7 நாட்களுக்கு தடுப்பு காவல் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டத்தோ அந்தஸ்து கொண்டுள்ள இந்திய நபருக்கு டத்தோ சிவா மற்றும் தி.குமார் ஆகியோர் வழக்கறிஞர்களாக ஆஜராகினர்.

-இரா. கோபி & எல்.கே.ராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here