திருச்சிக்கு தேர்வு எழுத வந்த நடிகை சாய் பல்லவியுடன் மாணவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகிவருகிறது.
வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்து இந்தியாவுக்கு வரும் மாணவர்கள், இங்கு மருத்துவராக பணியாற்ற வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி தேர்வில் (FMGE- Foreign Medical Graduate Examination) தேர்ச்சி பெறுவது அவசியம். அதாவது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 5 நாடுகளில் மருத்துவப் படிப்பு முடித்தால் இந்த தேர்வை இந்தியாவில் எழுதத் தேவையில்லை.
ரஷ்யா , சீனா , வங்கதேசம் , பிலிப்பைன்ஸ் , ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற இந்தத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் . அதையொட்டி தேசிய தேர்வு வாரியம் , ஜூன் மற்றும் டிசம்பர் என ஆண்டுக்கு 2 முறை இந்தத் தேர்வை நடத்தி வருகிறது .
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜூன் மாதம் நடைபெறவிருந்த இந்தத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டு , ஆகஸ்ட் 31 ஆம் தேதி நடைபெற்றது . இந்தத் தேர்வுக்காக திருச்சி சிறுகனூர் எம் . ஏ . எம் பொறியியல் கல்லூரிக்கு நடிகை சாய் பல்லிவ வந்திருந்தார் . அந்த தேர்வு மையத்தில் அவர் தேர்வு எழுதினார் . இவர் , ஜார்ஜியா நாட்டில் மருத்துவப் படிப்பு முடித்துள்ளார் .
அப்போது அவரை அடையாளம் கண்டு கொண்ட சக தேர்வர்கள் அவரை மொய்த்து எடுத்து அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர் .
திருச்சிக்கு தேர்வு எழுத வந்த நடிகை சாய் பல்லவியுடன் மாணவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகிவருகிறது.
அப்போது அவரை அடையாளம் கண்டு கொண்ட சக தேர்வர்கள் அவரை மொய்த்து எடுத்து அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர் .