சென்னையை நோக்கி நெருங்கி வரும் ‘நிவர்’ புயல்

சென்னையிலிருந்து 470 கிலோமீட்டர் தொலைவில் நிவர் புயல் சின்னம் நிலைகொண்டுள்ளது.

புதுச்சேரியிலிருந்து 440 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டுள்ளது. இதன் மூலம் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் விரைவில் புயலாக மாறுகிறது.

இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

இருப்பினும் புயல் சின்னம் அருகே உள்ள புதுச்சேரி, காரைக்காலில் சென்னையில் பெய்த அளவுக்கு மழை பெய்யவில்லை. புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழை பெய்த நிலையில் இன்று மழை இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here