திங்கள்கிழமை (ஆகஸ்ட் 2) நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது

நாடாளுமன்றத்தின் ஐந்து நாள் சிறப்பு அமர்வின் நிறைவு  நாள் அறிவிக்கப்படாத ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமையன்று (ஜூலை 31) அனைத்து  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டதாக, நாடாளுமன்ற செயலாளர் நிஜாம் மைடின் பாஷா மைடின் தெரிவித்தார். பலர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுகாதார அமைச்சகத்தால் இடர் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், சுகாதார இயக்குநரின்  பரிந்துரையின்படி ஒத்திவைக்கப்படுவதாகக் கூறினார்.

சாத்தியமான தொற்றுநோய்களுக்கு நாடாளுமன்றம் இப்போது அதிக ஆபத்துள்ள இடமாக கருதப்படுகிறது என்றும் அவர் கூறினார்.     ஆகஸ்ட் 2ஆம் தேதி நாடாளுமன்றம் கூடாது என்று அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவிக்க துணை சபாநாயகர் டத்தோ முகமது ரஷீத் ஹஸ்னனிடம் இருந்து ஒரு உத்தரவு வந்ததாக நிஜாம் மைடின் கூறினார்.

ஐந்து நாள் சிறப்பு அமர்வு ஜூலை 26 அன்று தொடங்கி ஆகஸ்ட் 2 அன்று முடிவடைய இருந்தது. சிறப்பு அமர்வு கோவிட் -19 தொற்றுநோய் நிலைமை, தடுப்பூசி செயல்முறை, அவசரகால சட்டம் உட்பட தேசிய பொருளாதார மீட்பு திட்டம் குறித்து விவாதிக்க இருந்தது.

இருப்பினும், அந்தந்த அமைச்சர்களின் விளக்கங்கள் எந்த வாக்கெடுப்பையும் உள்ளடக்கவில்லை. வியாழக்கிழமை (ஜூலை 29) பிற்பகல் 3.30 மணியளவில், முகமட் ரஷித் இரண்டு பேருக்கு கோவிட் -19 உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்து நாடாளுமன்ற அமர்வு நடைபெறாது என்று தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here