பாசீர் மாஸ், மார்ச் 2 :
கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப். 27) காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஒருவரின் சடலம், நேற்று மாலை, இங்குள்ள ரந்தாவ் பாஞ்சாங்கிற்கு அருகிலுள்ள கம்போங் ஜெலுஜுக்கில் உள்ள ஒரு கடைக்குப் பின்னால் கண்டெடுக்கப்பட்டது.
பாசீர் மாஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் துணை ஆணையர் முகமட் நசாருடின் முகமட் நசீர் கூறுகையில், பாதிக்கப்பட்டவர் அஹ்மட் பைசால் சுல்கெப்லி (26) என அடையாளம் காணப்பட்டார், அவர் வெள்ளத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது, மவ்லும் அவரது சடலம் நேற்று மாலை 3.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.
கிளாந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஸ்கூபா பிரிவு மற்றும் ரந்தாவ் பாஞ்சாங் காவல் நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்களால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
“சடலம் மேல் நடவடிக்கைகளுக்காக ரந்தாவ் பாஞ்சாங் சுகாதார மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது என்றும் காணாமல் போனவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டது குறித்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.
இது பாசீர் மாஸில் வெள்ளத்தால் ஏற்பட்ட மரணம் தொடர்பான இரண்டாவது வழக்கு என்றும், கிளாந்தான் மாநிலத்தில் நான்காவது வழக்கு என்றும் அவர் கூறினார்.