கோலாலம்பூருக்கு செல்லும் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல்

கோலாலம்பூர், ஜூன் 6 :

வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறைகளை முடித்துக் கொண்டு மக்கள் இன்று தலைநகருக்குத் திரும்பத் தொடங்கியதால், தலைநகரை நோக்கி வரும் பல முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (LLM) அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு மூலம், இன்று மாலை 6 மணி நிலவரப்படி, வடக்கு – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பல வழித்தடங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

மேலும் வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் 154.1 ஆவது கிலோமீட்டரில் ஏற்பட்ட விபத்துக்கு காரணமாக, புக்கிட் கம்பீரிலிருந்து பாகோ வரை மெதுவான போக்குவரத்து காணப்பட்டது, அங்கு பாதைகள் எதுவும் மூடப்படவில்லை என்றும் அது தெரிவித்திருந்தது.

பொதுமக்கள் சமீபத்திய போக்குவரத்து தகவலைப் பெற ப்ளஸ்லைன் அல்லது கட்டணமில்லா லைன் 1800-88-0000 மற்றும் டுவிட்டர் பக்கம் http://www.twitter.com/plustrafik அல்லது LLM லைன் 1800-887752 மற்றும் Twitter பக்கம் http: //www.twitter .com/LLMinfotrafik போன்றவற்றை அணுகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here