கமல்ஹாசனின் 233ஆவது பட கதையின் புதிய தகவல்

நடிகர் கமல், தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் 233-வது படத்தை ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ போன்ற படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளதாக படக்குழு அறிவித்தது. இப்படத்திற்காக கமல்ஹாசன் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், கமல்ஹாசனின் 233-வது படத்தின் கதை குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இராணுவ பின்னணியில் உருவாகவுள்ளதாகவும் கமல்ஹாசன் முன்னாள் இராணுவ அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here