தனது வளர்ப்பு மகளை மூன்று வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் ஆடவர் கைது

கிரிக் :

மூன்று வருடங்களாக தனது வளர்ப்பு மகளான 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு விவசாயி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த வியாழன் மதியம் 12.30 மணியளவில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்ததையடுத்து, 41 வயது சந்தேக நபரின் செயல்கள் வெளிச்சத்திற்கு வந்ததாக பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி கூறினார்.

சந்தேகநபர் புகார் செய்யப்பட்ட அதே நாளில் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் வியாழக்கிழமை வரை ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சிறுமிக்கு ஒன்பது வயதாக இருந்தபோது, முதன்முதலாக இந்தச் சம்பவம் நடந்ததாக பாதிக்கப்பட்டவரின் பள்ளி ஆசிரியர் கூறினார்.

மேலும் கடந்த செவ்வாய்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஆயிர் கண்டாவில் உள்ள தோட்டத்தில் உள்ள ஒரு குடிசையில் சந்தேகநபர் கடைசியாக தனது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர் தைப்பிங் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்றும், குற்றவியல் சட்டத்தின் 376 (3) பிரிவின்படி வழக்கு விசாரிக்கப்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here