பெட்டாலிங் ஜெயா:
நாட்டின் எந்தவொரு அரசியல் கட்சியையும் கூட்டரசு அரசாங்கத்தில் சேர அழைக்கும் உரிமை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு உண்டு என்று டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.
“அமைச்சரவையை அமைக்கவும், எந்த ஒரு அமைச்சரவை அமைச்சரையும் மாற்றவும் பிரதமருக்கு உரிமை உண்டு,” என்று கூறிய அவர், இந்த விஷயத்தில் அவரது முடிவுகளை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவித்தார்.
அன்வர் சமீபத்தில் டைம் இதழுக்கு அளித்த பேட்டி தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த MCA தலைவர் இவ்வாறு கூறினார், அப்பேட்டியிக் அவர் PAS உடன் பணிபுரியும் யோசனை இருப்பதாக கூறினார்.
அந்த பதிவில், ஒற்றுமை அரசாங்கத்தில் சேர PAS க்கு அன்வாரின் அழைப்பின் மூலம் “அரசியலில் நிரந்தர எதிரி என்று எவரும் இல்லை” என்பதை நிரூபித்தது என்றும் “சாத்தியமற்றதை சாத்தியமாக்கும்” முயற்சிக்கும் ஒரு முயற்சி என்றும் டாக்டர் வீ கூறினார்.
PKR மற்றும் DAP ஆகியவை 2008 மற்றும் 2013ல் PAS உடன் இணைந்து செயல்பட்டதாகவும், எதிர்காலத்தில் இந்த மூன்று கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் அவர் கூறினார்.
























