கோலாலம்பூர்:
சிலாங்கூரில் உள்ள பத்துமலை இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் இன்று அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டது.
இதில் குறித்த தொழிற்சாலை 60 விழுக்காட்டுக்குமேல் எரிந்து நாசமானது.
அதிஷ்டவசமாக இதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை தெரிவித்துள்ளது.