Happy Street:பெண்கள் அரைகுறை ஆடையுடன் கலந்துகொண்டு எந்த ஆணுடனும் ஆடலாம்

சென்னை: மதுரை, கோவை, சேலம், திருச்சி என சென்னையை தாண்டி பல மாவட்டங்களிலும் ஹேப்பி ஸ்ட்ரீட் கலாச்சாரம் ஒவ்வொரு வார விடுமுறையின் போதும் களைகட்டி வரும் நிலையில், அதற்கு எதிராக நடிகர் ரஞ்சித் குரல் கொடுத்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கலாச்சாரத்தையே சீரழிக்கும் நிகழ்வாக ஹேப்பி ஸ்ட்ரீட் உள்ளது என்றும் பெண்கள் அரைகுறை ஆடையுடன் அதில் கலந்து கொண்டு எந்த ஆணுடனும், எந்த பெண்ணு டனும் ஆடலாம் என்கிற நிலை உருவாகி இருப்பது தமிழ் கலாச்சாரம் சீரழிவை நோக்கி செல்வதற்கான அறிகுறி என தனது கருத்தையும் கண்டனத்தையும் முன் வைத்துள்ளார்.

  ரஞ்சித் என்றதுமே பா. ரஞ்சித் என நினைத்து விட வேண்டாம். இவர் தமிழ் சினி மாவில் வில்லனாகவும் சில படங்களில் ஹீரோவாகவும் தற்போது சின்னத்திரை நடிகராகவும் வலம் வரும் நடிகர் ரஞ்சித். பொன் விலங்கு படத்தில் அறிமுகமானவர் மைனர் மாப்பிள்ளை, அவதார புருஷன், மறுமலர்ச்சி, நட்புக்காக, பசுபதி கேர் ஆஃப் ராசக்கா பாளையம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ரோசப்பூ சின்ன ரோசப்பூ என சரத்குமார் பார்த்து பாடினாரே அந்த பிரியா ராமனை 1999ல் திருமணம் செய்துக் கொண்ட ரஞ்சித் 2014ல் விவாகரத்து செய்தார். அதன் பின்னர் ராகசுதா எனும் நடிகையை திருமணம் செய்துக் கொண்ட இவர், 2015ல் அவரையும் விவாகரத்து செய்து விட்டார். இவர் கலாச்சார சீர்கேடு பற்றி பேசுவ து படிக்கிற உங்களுக்கே ஆச்சரியமா இருக்கும்.

தற்போது செந்தூரப்பூவே மற்றும் பாக்கி யலட்சுமி தொடர்களில் நடித்து வருகிறார்.  இந்நிலையில், சமீபத்தில் பாரம்பரிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஞ்சித் தமிழ் மக்கள் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் மறந்து வரு கின்றனர் என்றும் ஹேப்பி ஸ்ட்ரீட் போன்ற நிகழ்ச்சிகள் கலாச்சாரத்தையும் இளை ஞர்களையும் சீரழிக்கின்றன என்றார். ஆரம்பத்தில் செல்போன் கம்யூனிகேஷ னுக்காக என சொல்லப்பட்டது. ஆனால், இப்போ அதில் தான் ஆன்லைன் மோசடி வரை ஆபாச படங்கள் வரை என இளைஞர்களை கெடுத்து வருகிறது என்றார்.

மேலும், தன்னிடம் பவர் இருந்தா அவர்களை எல்லாம் ஆயுள் கைதியாக மாற்றி விடு வேன் என்றும் கொந்தளித்தார். நடிகர் ரஞ்சித் சொல்வது சரியான ஒன்று தான் என  என சில இளைஞர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். காலையில் இருந்து இரவு வரை செல்போன் நோண்டும் இளைஞர்களுக்கு எங்கே இருந்து வருகிறது ஸ்ட்ரெஸ் என்றும் ரஞ்சித் கேட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here