விமான நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதற்கான நிபந்தனைகள் மறுபரிசீலனை செய்யப்படும்

கோலாலம்பூர்:

புதிய விமான நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதற்கான நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மலிவுக் கட்டணத்தில் விமானச் சேவை வழங்கிய ‘MyAirline’ நிறுவனம் நிதி நெருக்கடி காரணமாக திடீரென தன் செயல்பாடுகளை நிறுத்தியது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதனைக் கருத்தில்கொண்டு, விமான நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதற்கான நிபந்தனைகளில் மாற்றம் செய்யவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.

விமானச் சேவை உரிமத்திற்குப் புதிதாக விண்ணப்பிக்கும் நிறுவனங்களின் திறமையையும் நிதி நிலைமையையும் உறுதிசெய்யும் நிபந்தனைகள் மிகவும் கடுமையாக இருக்க வேண்டும் என அவர் வலியுருத்தினார்.

மேலும் இவ்வாறு சேவை வழங்க விண்ணப்பிக்கும் நிறுவனங்களின் பின்னணிகளை முழுமையாக ஆராய வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here