கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கோலாலம்பூர்:

பேராக்கில் வெள்ளம் நேற்றிரவு சீரடைந்த நிலையில் கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கெடாவில், நேற்று காலை நிவாரண மையங்களில் தங்கியிருந்த 34 குடும்பங்களைச் சேர்ந்த 107 பேருடன் ஒப்பிடும்போது, நேற்று இரவு 68 குடும்பங்களைச் சேர்ந்த 210 பேராக அதிகரித்துள்ளது.

கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் இரண்டு தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக கெடா சிவில் பாதுகாப்புப் படையின் பேரிடர் மேலாண்மை செயலகத் தலைவர், மேஜர் முஹமட் சுஹைமி முகமது ஜைன் தெரிவித்தார்.

இவை தவிர, கோத்தா ஸ்டாரில் நேற்று மாலை 5 மணிக்கு SK தாமான் அமானில் மற்றொரு நிவாரண மையம் திறக்கப்பட்டது, ஆனால் அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் கணக்கிடப்படுகிறது, ”என்று அவர் நேற்றிரவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here