அடையாளம் தெரியாத சடலம் பங்கோரில் இருந்து மீட்பு

பூலாவ் பங்கோர் கடற்கரையில் நீரில்  அடையாளம் தெரியாத உடல் சிதைந்த நிலையில் மிதந்தது. மதியம் 12.18 மணியளவில் ஒரு அழைப்பாளர் மூலம் மிதக்கும் உடல் இருப்பதைப் பற்றி போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டது என்று மஞ்சோங் காவல்துறைத் தலைவர் நோர்டின் அப்துல்லா கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது. பூலாவ் பங்கோர் காவல் நிலையம், கம்போங் ஆச்சே கடல் காவல்துறை மற்றும் பூலாவ் பங்கோர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் ஆகியவற்றின் பணியாளர்கள் மதியம் 12.50 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்ததாக அவர் கூறினார்.

நீல நிற டெனிம் ஜீன்ஸ் மற்றும் சிவப்பு சட்டை அணிந்திருந்த உடலை பரிசோதித்த பிறகு, எங்கள் ஆட்கள் எந்த அடையாளத்தையும் காணவில்லை. அதே நேரத்தில் பாலினம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. உடல் சிதைவு நிலை மற்றும் பாசி படர்ந்த ஆடைகளின் அடிப்படையில் இரண்டு வாரங்களுக்கு மேலாக கடலில் இருந்ததாக நாங்கள் நம்புகிறோம் என்று பெரித்தா ஹரியான் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். இந்த வழக்கு தற்போதைக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று நோர்டின் கூறினார். குடும்ப உறுப்பினரை இழந்த பொதுமக்கள் அல்லது தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது மஞ்சோங் காவல் நடவடிக்கை அறையை 05-6886-222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here