24 மணி நேரம் இடைவிடாது கலைப் படைப்புகளை வழங்கி உலக சாதனை படைத்தார் டாக்டர்.ராகவி பவனேஸ்வரி

ஜோகூர்:

ஜோகூரைச் சேர்ந்த சங்கீத நாட்டிய குருகுலம் கலைப் பள்ளி, ராக் ஸ்டார் மீடியா , Bharata Chakra Cultural Unity Academy மற்றும் RagsStar International Book Of Records Pvt Ltd ஆகிய நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ராகவி பவனேஸ்வரி ஏற்பாட்டில், கடந்த 2023, டிசம்பர் 9 ஆம் தேதி உலகசாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது.

ஜோகூர்பாரு இஸ்கண்டார் புத்ரி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பல நாடுகளில் இருந்து மொத்தம் 1854 பேர் கலந்து புதிய சாதனையாளர்களாக பெயர் பதித்தனர்.

இதன்போது 108 வகையான கலைகளை பங்கேற்பாளர்கள் இணைந்து 24மணி நேரம் இடைவிடாது பல்வேறு படைப்புகளை வழங்கி இச்சாதனையைப் புரிந்துள்ளனர்.பல நாடுகளிலிருந்து கலைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், அறிஞர்கள், விளையாட்டாளர்கள், கோயில் நிர்வாகிகள், தாதியர்கள், மருத்துவர்கள், உணவு கடை உரிமையாளர்கள், நடன கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் Online தொலைக்காட்சி நிபுணர்கள் ஆகியோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் கலை படைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் மலேசியாவில் நம் கலைகளை வளர்த்தெடுக்க நினைக்கும் அன்பர்களும் இணைந்து செயலாற்ற டாக்டர்.ராகவி வேண்டுகோள் விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here