கோலாலம்பூர்:
இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா மாகாணத்தில் இன்று அதிகாலை 1.16 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றும், இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாகவும் மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் இந்தோனேசியாவின் ஜெயபுராவுக்கு மேற்கே 168 கி.மீ தொலைவில் 76 கி.மீ ஆழத்தில் இருந்ததாக அது கூறியது.
இந்த நிலநடுக்கத்தால் மலேசியாவிற்கு சுனாமி ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை என்றும் அது தெரிவித்துள்ளது.