தேங்காய்ப்பால் அரைக்கும் இயந்திரத்தில் சிக்கிய கை; இளம்பெண் காயம்

பெண்டாங்:

நேற்றிரவு இங்குள்ள கம்போங் பாடாங் துரியானில் உள்ள தனது வீட்டில் உள்ள தேங்காய் பால் இயந்திரத்தில் கை சிக்கியதில், 18 வயது இளம்பெண் ஒருவர் இடது கையில் காயமடைந்தார்.

சம்பவம் தொடர்பில் இரவு 9.11 க்கு அழைப்பு வந்ததாக, பெண்டாங் நிலைய தீயணைப்பு மற்றும் மீட்பு தலைவர், துணை தீயணைப்பு கண்காணிப்பாளர் முஹமட் எஸ்சாட் எம்ரான் எசானி கூறினார்.

உடனே பெண்டாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் 8 உறுப்பினர்கள் அங்கு சென்றதாக அவர் கூறினார்.

“சம்பவ இடத்திற்கு வந்ததும், தீயணைப்பு வீரர்கள் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி 15 நிமிடங்களில் பாதிக்கப்பட்டவரின் சிக்கிய கையை அகற்றினர்” என்று அவர் சொன்னார்.

மேலும் குறித்த பெண் மேலதிக சிகிச்சைக்காக அலோர் ஸ்டார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here