முதலீட்டாளர்களின் விருப்பமான இடமாக நெகிரி செம்பிலான் உள்ளது – மந்திரி பெசார் பெருமிதம்

கோலாலம்பூர்:

நெகிரி செம்பிலான் மாநிலம் முதலீட்டாளர்களுக்கான தேர்வு இடமாக இன்னமும் தொடர்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் தெரிவித்துள்ளார்.

இதற்கு மாநில அரசாங்கத்தின் அர்ப்பணிப்புடன், சாத்தியமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து நல்லிணக்கத்துடன் செயற்பட வேண்டும் என்று, நெகிரி செம்பிலானின் யாங் டிபெர்டுவான் பெசார், துவாங்கு முஹ்ரிஸ் இப்னி அல்மர்ஹூம் துவாங்கு முனாவிரின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு இஸ்தானா பெசார் ஸ்ரீ மெனந்தியில் இன்று நடந்த விழாவில் உரையாற்றிய போது அமினுதீன் இவ்வாறு கூறினார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி கூடிய தேசிய முதலீட்டு கவுன்சில், நெகிரி செம்பிலான், சிலாங்கூர், மலாக்கா மற்றும் கோலாலம்பூர் ஆகியவற்றை உள்ளடக்கிய மத்திய பிராந்திய தொழில்துறை மேம்பாட்டு முயற்சிக்கு ஒப்புதல் அளித்ததாக அமினுதீன் மேலும் கூறினார்.

மேலும் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கான RM3.0 பில்லியன் முதலீடுகளைப் பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

“நெகிரி செம்பிலான் மாநிலம் பொருளாதார போட்டித்தன்மையை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது என்றும் “13வது மலேசியா திட்டத்தை நோக்கி அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை நிலையானதாக வளர்க்கிறது,” என்றும் அவர் கூறினார்.

மேலும், மாநில வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் மாற்றம் மற்றும் எரிசக்தி மாற்றம் போன்ற புதிய துறைகளை உள்ளடக்கிய சீர்திருத்த முயற்சிகளில் மாநில அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று அமினுதீன் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here