கோலாலம்பூர்:
நவம்பர் 22 முதல் 23 வரை நடைபெறும் 20 நாடுகளின் (G20) தலைவர்கள் ஒன்றுகூடும் உச்சி மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்,தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கு இரண்டு நாள் பணிப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
மலேசியா தற்போது ஆசியான் தலைவராக இருப்பதால், அன்வாரின் இம்மாநாட்டில் பங்கேற்பு முக்கியத்துவம் பெறுகிறது. தென்னாப்பிரிக்க ஜனாதிபதி மற்றும் G20 தலைமைச் செய்பவரான சிரில் ராமபோசா அவர்களின் அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரிலேயே அன்வார் இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார்.





















