குருவாயூரில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

குருவாயூர்குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது.கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற குருவாயூர் கோவிலில், எல்லா ஆண்டும் ஆவணி மாதம், அஷ்டமி ரோகிணி நாளில் ஸ்ரீ கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடுவது வழக்கம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நேற்று மிகவும் எளிமையான முறையில் விழா கொண்டாடப்பட்டது.

மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கோவிலில், நேற்று காலை 7:00 மணிக்கு மூலவர் செண்டை மேளம் முழங்க, யானை மீது எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 3.30 மணிக்கும் மூலவர் யானை மீது எழுந்தருளினார்.நேற்று முன்தினம் இரவு முதலே, கோவில் வளாகம் விளக்குகளால் ஜொலித்தது.

அத்தாழ பூஜைக்காக, 10 ஆயிரம் நெய்யப்பம், 520 லிட்டர் பால் பாயாசம் தயாரிக்கப்பட்டது.ஆன்லைனில்பதிவு செய்த, 1,000 பேருக்கு நேற்று சுவாமி தரிசனத்துக்கு தேவஸ்தான நிர்வாகம் அனுமதி அளித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here