கொரோனா தடுப்பு பணிகளுக்கு சத்குரு ரூ.11 கோடி நிதி!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக சத்குரு ஜக்கி வாசுதேவ் இதுவரை 11 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளார்.

சத்குருவின் ஈஷா அவுட்ரீச் எனும் அமைப்பு கிராமப்புற ஏழைகளுக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் கொரோனா தொற்று பரவல் தொடங்கியதில் இருந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

அந்த வகையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் தற்போது கொரோனா தடுப்பு பணிகளுக்காக 2 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளார். ஏற்கனவே இரண்டு முறை அவர் நிதி வழங்கியுள்ளார்.முதல்முறை ரூ.4 கோடி, இரண்டாவது முறை ரூ.5 கோடி என நிதி அளித்துள்ள நிலையில் தற்போது மேலும் 2 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

ஈஷா அவுட்ரீச் கோவை தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதி மக்களுக்கு அதிக அளவில் உதவிகள் செய்துவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here