சாலை விபத்தில் 2 இந்தியர்கள் பலி

நீலாய்:  வடக்கு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 283.6 கி.மீ. வழியாக சனிக்கிழமை (ஜூன் 19) லோரி மோதியதில் 48 வயது ஓட்டுநரும் 28 வயது உதவியாளரும் கொல்லப்பட்டதாக நீலாய் ஓ.சி.பி.டி. முகமட் பாஸ்லி அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

என்.வாசுதேவன் மற்றும் அவரது உதவியாளர் ஆர்.மோகன் ராஜ் ஆகியோர் இங்கிருந்து பேராக்கிற்கு கோழிகளை கொண்டு சென்று கொண்டிருந்தபோது, லோரி கட்டுபாட்டை இழந்து ஒரு தூணில் மோதி தீ பிடித்தது. எரியும் லோரியில் இருந்து வாகன ஓட்டுநரான வசுதேவனை  வெளிஇல் இழுக்க முடிந்தது, ஆனால் மோகன் ராஜ் சிக்கி எரிக்கப்பட்டார் என்று முகமட் பாஸ்லி கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், வாசுதேவனின் 16 வயது மகனும் லோரியில் இருந்தான், ஆனால் தானாகவே வாகனத்திலிருந்து வெளியேற முடிந்தது.

டிரைவர் ஆரம்பத்தில் காப்பாற்றப்பட்ட போதிலும், தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் சிறிது நேரத்திலேயே இறந்தார் என்று அவர் கூறினார்,.சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here