இன்று 13,104 பேருக்கு கோவிட் தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் 13,104 கோவிட் -19  தொற்றுகள் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு டுவிட்டர் பதிவில் சுகாதார தலைமை இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 2,198,235 ஆக உள்ளது.

சரவாக் 2,943 உடன் அதிக எண்ணிக்கையிலான வழக்குகளைப் பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து சிலாங்கூர் (1,558), ஜோகூர் (1,455), கெளந்தன் (1,206), சபா (1,078), பேராக் (994), பினாங்கு (955), கெடா (721), தெரெங்கானு (685), பகாங் (604), மலாக்கா (362), கோலாலம்பூர் (270), நெகிரி செம்பிலான் (165), பெர்லிஸ் (80), புத்ராஜெயா (24) மற்றும் லாபுவான் (4).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here