மரம் விழுந்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் நோரஸாம் காமிஸைத் தொடர்பு கொண்டபோது, செவ்வாய்க்கிழமை (மார்ச் 8) மதியம் சம்பவத்தின் போது 60 வயதுடைய நபர், சுங்கை லங்காட்டில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.
மாலை 4.50 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், பாதிக்கப்பட்டவர் மீது விழுந்த மரத்தை அகற்றினர். அவரது மரணம் சுகாதார அமைச்சக அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டது. உடல் மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.