ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து 7 கிராமங்கள் மீட்பு- உக்ரைன் தகவல்

உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் ஒரு வருடத்தை கடந்து நீடித்து வருகிறது. ரஷியாவின் தாக்குதல்களை உக்ரைன், தனது நட்பு நாடுகளின் உதவிகளோடு எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து 7 கிராமங்களை மீட்டுள்ளதாக உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது. வார இறுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளில் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் உள்ள ஏழு கிராமங்களை ரஷ்யப் படைகளிடம் இருந்து மீட்டுள்ளதாக துணை பாதுகாப்பு மந்திரி கன்னா மல்யார் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தெற்கு சபோரிஜியா பகுதியில் உள்ள லோப்கோவோ, லெவாட்னே மற்றும் நோவோடரிவ்கா கிராமங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here