பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் : ஆசிரியர் கைது

தாவாவ்:

ள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகத்தின் பேரில், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

36 வயதுடைய சந்தேகநபர் நேற்று இரவு 9.58 மணியளவில் தாவாவ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் குழுவால் கைது செய்யப்பட்டார் என்று தாவாவ் மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் ஜாஸ்மின் ஹுசைன் கூறினார்.

சந்தேக நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட படிவம் 4 மாணவி, நேற்று பிற்பகல் 2.30 மற்றும் 4.45 க்கு இடையில் ஜாலான் அபாஸில் உள்ள ஆசிரியரின் வீட்டிலுள்ள ஒரு அறையில் கற்பழிக்கப்பட்டதாகக் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் சந்தேகநபருக்கும் காதல் தொடர்பு இல்லை என்றும், மாணவர் மற்றும் ஆசிரியராக மட்டுமே தொடர்பு இருந்ததாகவும் ஜாஸ்மின் கூறினார்.

சந்தேகநபர் குற்றவியல் சட்டத்தின் 376 வது பிரிவு மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 377 (C) இன் படி விசாரணைக்கு உதவுவதற்காக இன்று முதல் ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார் என்னு அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here