கெவின் மொரைஸ் கொலை வழக்கில் 6 பேருக்கு டிசம்பர் மாதம் விசாரணை

புத்ராஜெயா:

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு துணை அரசு வழக்கறிஞர் கெவின் மொராயிஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ராணுவ மருத்துவர் உட்பட 6 பேரின் மேல்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

வழக்கு விசாரணைக்கு தயாராகும் வகையில் மேல்முறையீட்டு பதிவுகளை படிக்க அவகாசம் தேவை என்று வழக்கறிஞர் எம் மனோகரன் கேட்டுக்கொண்டார்.

அரசுத் தரப்பில் ஆஜரான துணை அரசு வழக்கறிஞர் டுசுகி மொக்தாரிடமிருந்தோ அல்லது மற்ற மேல்முறையீடுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடமிருந்தோ எந்த ஆட்சேபனையும் எழவி ல்லை.

நீதிபதி ஹதாரியா சையத் இஸ்மாயில் தலைமையிலான 3 பேர் கொண்ட பெஞ்ச் குறுகிய கால ஒத்திவைப்பய் ஏற்றுக்கொண்டது.

“இதுவே இறுதி ஒத்திவைப்பு” என்று கூறிய நீதிபதி, விசாரணை டிசம்பர் 4, 7 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று கூறினார்.

நீதிபதிகள் அஹ்மத் ஜைதி இப்ராஹிம் மற்றும் அஸ்மி அரிஃபின் ஆகியோரும் இருந்த னர்.செப்டம்பர் 4, 2015 அன்று செந்தூல், கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் சுபாங் ஜெயா ஆகிய இடங்களுக்கு இடையில் மொரைஸைக் கொலை செய்ததாகக் கண் டறியப்பட்ட 6 பேருக்கும் ஜூலை 10, 2020 அன்று உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

மொரைஸ், 55, செப்டம்பர் 4, 2015 அன்று காணாமல் போனதாகக் கூறப்பட்டது, மேலும் கடைசியாக கோலாலம்பூரில் உள்ள தனது குடியிருப்பில் இருந்து தனது அதிகாரப்பூர்வ காரில் புறப்பட்டார்.

அவரது உடல் 12 நாட்களுக்குப் பிறகு பெர்சியாரன் சுபாங் மேவா, சுபாங் ஜெயாவில் சிமென்ட் நிரப்பப்பட்ட எண்ணெய் டிரம்மில் கண்டெடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here