கோலாலம்பூர்:
கிளந்தான், திரெங்கானு மற்றும் பகாங் ஆகிய பகுதிகளில் இன்று முதல் புதன்கிழமை (நவ. 29) வரை தொடர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளந்தானில் உள்ள தும்பாட், பாசீர் மாஸ், கோத்தா பாரு, தனாஹ் மேரா, பச்சோக், மஞ்சுங் மற்றும் பாசீர் பூத்தே ஆகிய பகுதிகளுக்கு தொடர் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
திரெங்கானுவில் உள்ள பெசூட், செத்தியூ, கோலா நெருஸ், கோலா திரெங்கானு, மாராங், டுங்கூன் மற்றும் கெமாமன் ஆகிய இடங்களுக்கும் இதே எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இது தொடர்பான கேள்விகளுக்கு MetMalaysia ஹாட்லைன் 1-300-22-1638 ஐயும் தொடர்பு கொள்ளலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.