கட்டுப்பாட்டை இழந்து உணவகத்திற்குள் பாய்ந்த கார்; ஓட்டுநருக்குப் பலத்த காயம்

புக்கிட் மெர்தாஜாம் :

இன்று அதிகாலை ஜாலான் சுங்கை செமாம்பு, குபாங் செமாங்கில் கட்டுப்பாட்டை இழந்த கார் உணவகத்திற்குள் பாய்ந்தது. இக்காரை ஓட்டிய ஓட்டுநருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடத்திற்குச் செல்வதற்கு முன், அதிகாலை 1.27 மணிக்குத் தங்கள் தரப்பு அவசர அழைப்பு வந்ததாக பினாங்கு தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தபோது, ​​சாலையோரத்தில் உள்ள உணவகத்தில் கார் இருப்பதும் காரில் ஒருவர் சிக்கியிருப்பதையும் கண்டதாகவு அவர் குறிப்பிட்டார்.

நள்ளிரவு 1.52 மணியளவில் ஓட்டுநர் தனது காரிலிருந்து வெளிய கொண்டு வரப்பட்டு செபராங் ஜெயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here