வெள்ளம்: மூன்று மாநிலங்களில் இருந்து நிவாரண மையங்களில் தஞ்சமடைந்தவர்களின் எண்ணிக்கை 289 பேராக உள்ளது – நட்மா

கோலாலம்பூர்:

ன்று வியாழன் (ஜன. 18) காலை 6 மணி நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 289 பேர் இன்னும் மூன்று மாநிலங்களில் இயங்கிவரும் ஏழு தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் (நட்மா) தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, ஜோகூரில் 22 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேர் பத்து பகாட் மற்றும் சிகாமாட்டில் உள்ள மூன்று மையங்களில் இன்னும் தங்கியுள்ளனர்.

அதேநேரத்தில் பகாங்கில், 36 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 110பேர் ரொம்பினில் உள்ள இரண்டு மையங்களில் உள்ளனர், சபாவில், பெலூரானில் உள்ள இரண்டு மையங்கள் இன்னும் 42 குடும்பங்களை சேர்ந்த 99 பேர் தங்கியுள்ளனர்.

இதற்கிடையில், ஐந்து மாநிலங்களை உள்ளடக்கிய 6 ஆறுகள் அபாய மட்டத்தில் இருப்பதாக வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள தொலைத்தொடர்பு நிலையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here