ஈப்போ:
பெரோடுவா அல்சா பல்நோக்கு வாகனம் (MPV ) மற்றும் ஹோண்டா C70 மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
இன்று காலை 10.20 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், இங்குள்ள பெர்ச்சாம், தாமான் உத்தாமாவில் உள்ள ஒரு வீட்டின் முன் MPV வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி தீயில் எரிந்ததாக நம்பப்படுகிறது என்று, ஈப்போ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் அஸ்மான் ஹுசின் கூறினார்.
தகவல் கிடைத்ததும் தீயை அணைக்கும் பணிகளை மேற்கொள்ள 10 பேர் கொண்ட தீயணைப்புக் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது என்றும், சம்பவம் நடந்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வந்தவுடன், பாதிக்கப்பட்டவர், 60 வயதுடைய ஒரு ஆணும், 50 வயதுடைய ஒரு பெண்ணும், ஏற்கனவே பொதுமக்களால் வாகனத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது”என்று அவர் கூறினார்.
அஸ்மானின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட இருவரும் அவசர சிகிச்சைக்காக ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு (HRPB) ஈப்போவுக்கு அனுப்பப்பட்டனர், மேலும் சம்பவத்திற்கான காரணத்தை அடையாளம் காண மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன என்றார்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட இருவரும் சம்பவத்திற்கு முன்னதாக MPVயில் இருந்தனரா அல்லது மோட்டார் சைக்கிளில் இருந்தனரா என்பதை உறுதிப்படுத்த முடியாது என தீயணைப்புப் படைப் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும் தீ விபத்து காரணமாக ஏற்பட்டதா என்று கேட்டதற்கு, சம்பவத்திற்கான காரணம் இன்னும் போலீஸ் விசாரணையில் உள்ளது என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.