ஜோகூர்பாரு:
ஜோகூர் மாநிலத்திலுள்ள 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஜோகூர் பாரு, மெர்சிங், கோத்தா திங்கி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும், இந்த இடியுடன் கூடிய மழை எச்சரிக்கைகள் குறுகிய கால எச்சரிக்கைகள் என்றும், இது சுமார் ஆறு மணி நேரத்திற்கு நீடிக்கும் எனவும் அது தெரிவித்துள்ளது.