ஆரோக்கியம் தரும் 5 அற்புத மந்திரங்கள்

திக்கற்றவருக்கு தெய்வம் துணை என்பார்கள். இது கஷ்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பொருந்தும். சிலருக்கு எவ்வளவு தான் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு, வருடக் கணக்கில் சிகிச்சை எடுத்துக் கொண்டே இருந்தாலும் நோயின் தாக்கம் மட்டும் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும்.
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவரின் சார்பாக அவரின் குடும்பத்தில் உள்ளவர்கள் வழிபாடுகள், மந்திர பாராயணங்களை செய்து வந்தால் நோய்கள் குணமாகும். பலவிதமான நோய்களை குணமாக்கும் சக்தி மந்திரங்களுக்கு உண்டு.மனிதர்களுக்கு பல விதமான நோய்கள் ஏற்படுகின்றன. நோய் இல்லாத மனிதனே இல்லை என சொல்லும் கால கட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நோயற்ற வாழ்வே குறைவில்லாத செல்வம் என நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். ஆனால் என்னதான் பார்த்து பார்த்து சாப்பிட்டு, உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என அனைத்தையும் கடைபிடித்தாலும் சாதாரண தலைவலி, காய்ச்சல், சளி துவங்கி பெரிய நோய்கள் வரை வந்து கொண்டு தான் இருக்கிறது. சிலருக்கு எவ்வளவு தான் சிகிச்சை எடுத்தாலும் வந்த நோய் போகாமல் இருந்து கொண்டே இருக்கும். இப்படி நீண்ட நாள் நோயால் அவதிபடுபவர்கள் மருத்துவத்துடன் சில குறிப்பிட்ட சக்தி வாய்ந்த மந்திரங்களையும் நம்பிக்கையுடன் சொல்லி வந்தால், விரைவில் நோயின் தாக்கத்தில் இருந்த விடுபட்டு ஆரோக்கியம் பெற முடியும்.
நோய் தீர்க்கும் மந்திரங்கள் :
1. கணேஷ மந்திரம் :
ஓம் கம் கணபதயே நமஹ
2. மகாகாளி மந்திரம் :
ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயே நமஹ
3. மகா மிருத்யுஞ்ஜய மந்திரம் :
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே
சுகந்திம் புஷ்டி வர்தனம்
உஷ்டி வர்தனார் உர்வக்மிவ்
பந்தனன் மிருத்யோர் முக்ஷிய மா மரிதாத்
4. நரசிம்ம மந்திரம் :
உக்ரம் வீரம் மஹா விஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
நரசிஹம் பீஷ்ணம பத்ரம்
மிருத்யோர் மிருத்யும் நமாம்யஹம்
5. ஆஞ்சநேயர் மந்திரம் :
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தன்னோ ஹனுமதா பிரச்சோதயாத் இந்த சக்தி வாய்ந்த மந்திரங்களை எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் சொல்லலாம். அதிகாலை மற்றம் மாலை நேரத்தில் விளக்கேற்றி வைத்து, நோய்வாய்பட்டவரின் அருகில் அமர்ந்து சொல்வது மிகவும் விசேஷமானதாகும். இந்த மந்திரங்களை குறைந்த பட்சம் 11 என்ற எண்ணிக்கையில் சொல்ல வேண்டும். அதிகபட்சமாக 108, 1008 என்ற எண்ணிக்கையில் சொல்வது சிறப்பு. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களே இந்த மந்திரங்களை சொல்வது அதி விரைவாக பலன் தரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here