நாட்டைப் பிளவுபடுத்த முயல்வோரை நிராகரிப்போம்: அன்வார்

புத்ராஜெயா:

நாட்டை பிரிவினையாக மாற்ற முயலும் எந்தவொரு முயற்சியையும் மக்கள் உறுதியாக நிராகரிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

அவர் கூறுகையில், மலேசியா பல இனங்கள், மதங்கள், கலாச்சாரங்கள் இணைந்து உருவாக்கிய ஒற்றுமையின் அடிப்படையில் வளர்ச்சி கண்ட நாடு என்பதால், அந்த ஒற்றுமையைப் பாழாக்கும் சக்திகளை ஏற்க முடியாது என்றார்.

“நாம் ஒற்றுமையை பேண வேண்டும். நாட்டை முன்னேற்றம் செய்ய வேண்டுமென்றால், பிளவுபடுத்தும் அரசியலை மறுக்க வேண்டும். எந்த ஒரு குழுவும் மற்றொரு சமூகத்தைக் குறைத்து மதிக்கவோ, சாய்வு உண்டாக்கவோ கூடாது,” என்று அவர் குறிப்பிட்டார்.

அன்வார், தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒற்றுமை, சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு ஆகியவை மலேசியாவின் மிகப் பெரிய பலம் என்று நினைவூட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here