* சந்தனம் – சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும்.
* தேன் – கடன் தொல்லை விலகும்.
* விபூதி – நினைத்த காரியம் ஈடேறும்.
* மஞ்சள் – மங்கல காரியங்கள் நடந்தேறும்.
* அன்னம் – தனம், தானியம் பெருகும்.
* நல்லெண்ணெய் – மனதில் தூய்மையான எண்ணங்களும் பக்தியும் உண்டாகும்.
* தண்ணீர் – மனஅமைதி ஏற்படும்.
* பால் – குடும்பத்தில் மகிழ்ச்சி, ஆயுள் விருத்தி கிடைக்கும்.
* தயிர் – குழந்தை பாக்கியம் உண்டாகும்.
* இளநீர் – கஷ்டங்கள் நீங்கும்.
* கரும்புச்சாறு – வியாதிகள் நீங்கும்.
* அரிசி மாவுப்பொடி – லட்சுமி வாசம் உண்டாகும்.
இவற்றில் உங்களுக்கு எந்த வேண்டுதல் நிறைவேற வேண்டுமோ அல்லது என்ன தேவை உள்ளதோ அதற்கு ஏற்ற பொருளை அபிஷேகத்திற்கு வாங்கிக் கொடுக்கலாம். அல்லது வீட்டில் உள்ள விநாயகர் சிலைக்கு நீங்களே அபிஷேகம் செய்வதாக இருந்தால் அந்த குறிப்பிட்ட பொருளை பிரதான அபிஷேகமாக கொண்டு செய்யலாம். இந்த அபிஷேகத்தை தொடர்ந்து தினமும் 9, 11, 21 ஆகிய எண்ணிக்கையிலான நாட்கள் செய்யலாம். அப்படி முடியாதவர்கள் வாரந்தோறும் புதன்கிழமைகளில் செய்யலாம். அதே போல் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி நாட்களில் விநாயகருக்கு இந்த அபிஷேகங்களை செய்து, அருகம்புல் மாலை கட்டி போட்டால் விநாயகரின் அருளால் நம்முடைய வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும்.
விநாயகருக்கு உரிய மந்திரங்களை சொல்லி, அவர் முன் விளக்கேற்றி வைத்து வழிபடலாம். அதிகாலையில் விநாயகருக்கு இந்த அபிஷேகங்களை செய்வது சிறப்பு. அதிலும் வன்னி மரம் மற்றும் அரச மர விநாயகருக்கு அபிஷேகம் செய்வது வழிபடுவது மிகவும் உகந்தது.



















