முதலாளியின் வீட்டிற்கு நடந்து சென்றபோது திடீரென சரிந்து விழுந்து ஆடவர் மரணம்

பெட்டாலிங் ஜெயா:

ஜாலான் புக்கிட் மெந்தாரி செலாத்தான், பிரிவு 7 இல் நேற்று காலை ஆடவர் ஒருவர் சாலையில் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.

நேற்று காலை 7.08 மணியளவில் அந்த இடத்தில் ஒரு நபர் சாலையில் கிடந்ததாக் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பு வந்தது என்று, பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் முஹமட் ஃபக்ருதீன் அப்துல் ஹமீட் கூறினார்.

“பாதிக்கப்பட்ட 53 வயதான அவர் ஓட்டுநராக பணிபுரிகிறார் என்றும், சம்பவம் நடந்தபோது, அவர் தனது முதலாளியின் வீட்டிற்கு நடந்து சென்றதாக நம்பப்படுகிறது,” என்றும் அவர் நேற்று (நவம்பர் 14) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் தினமும் காலையில் தனது முதலாளியின் வீட்டிற்கு நடந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

“முதற்கட்ட விசாரணையில், இவ்வழக்கில் குற்றவியல் கூறுகள் எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டது மற்றும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக PPUM தடயவியல் துறைக்கு இன்று (நவம்பர் 15) அனுப்பப்பட்டுள்ளது எனறும் , வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here