பாசீர் மாஸில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

கோத்தா பாரு:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து பாசீர் மாஸில் மேலும் இரண்டு தற்காலிக நிவாரண மையங்கள் இன்று திறக்கப்பட்டன.

இரவு 9 மணி நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை நிவாரண மையங்களில் தங்கியிருந்த 4,549 பேருடன் ஒப்பிடுகையில், இன்று இரவு 1,528 குடும்பங்களைச் சேர்ந்த 4,840 பேராக அதிகரித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இரண்டு மாவட்டங்களில் செயற்பட்டுவரும் 15 தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர் என்று , சமூக நலத் துறையின் பேரிடர் தகவல் இணையதளம் தெரிவிக்கிறது.

இதற்கிடையில், publicinfobanjir.water.gov.my இணையதளத்தின் தரவுகளின் அடிப்படையில், கிளந்தானில் உள்ள இரண்டு முக்கிய ஆறுகள், அதாவது ரந்தாவ் பாஞ்சாங்கில் உள்ள சுங்கை கோலோக் 10.25 மீட்டர் அளவிலும், கோத்தா பாருவின் கோலா பெசாரில் உள்ள சுங்கை கிளந்தான் 1.94 மீட்டர் அபாய அளவைக் கடந்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here