24 மணி நேர கோவிட் தொற்று 2,690 – குணமடைந்தோர் 3,535

சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 2,690 புதிய கோவிட்-19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது.  தொற்று  3,000க்கு   கீழ்நோக்கிய போக்கைத் தொடர்கிறது. ஒரு அறிக்கையில், சுகாதார தலைமை இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,767,044 ஆக உள்ளது என்றார். 3,535 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,695,751 ஆக உள்ளது.

மொத்தம் 265 நோயாளிகள் தீவிர சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 188 பேர் கோவிட்-19  தொற்று மற்றும் 77 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டனர். இதற்கிடையில், 147 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது. 81 நோயாளிகள் கோவிட்-19 தொற்று எனவும் மீதமுள்ள 66 பேர் தொற்று இருக்கலாம் என்று  சந்தேகிக்கப்படுகிறார்கள்.

இன்று 2,390 உள்ளூர் நோய்த்தொற்றுகள் உள்ளன. இதில் 2,317 மலேசியர்கள் மற்றும் 73 வெளிநாட்டினர் மற்றும் 300 இறக்குமதி செய்யப்பட்ட தொற்றுகள் உள்ளன. இதில், நோயறிதலின் போது 1.9% நோயாளிகள் மட்டுமே வகை 3, 4 அல்லது 5 இல் இருந்தனர். இன்று மூன்று கொத்துகள் பதிவாகியுள்ளதாக நூர் ஹிஷாம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here