இங்கிலாந்தில் சம்பள உயர்வு கோரி பயிற்சி மருத்துவர்கள் 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டம்

இங்கிலாந்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில மாதங்களில் பஸ் டிரைவர்கள், தபால் ஊழியர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் தங்களது வேலையை விட்டு வெளியேறி உள்ளனர். இதே கோரிக்கையை இங்கிலாந்தில் உள்ள பயிற்சி மருத்துவர்களும் பல மாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை, பிரசவம் உள்ளிட்ட முக்கியமான சேவைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் இன்று போராட்டம் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here