மூவார்:
கடந்த மாதம் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட மாற்றுத்திறனாளி ஆடவர், தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மறுத்து விசாரணை கோரினார்.
முஹமட் சுல்ஃபாத்லி அஹ்மத் ராபி, 20, என்ற குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுக்கள் நீதிபதி அபுபக்கர் மனாத் முன் வாசிக்கப்பட்ட பின்னர், அவர் தனக்கெதிராக குற்றச்சாட்டுக்களை மறுத்தார்.
முதல் குற்றச்சாட்டின்படி, கடந்த மாதம் அதிகாலை 1 மணியளவில் இங்குள்ள ஒரு வீட்டில் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 376 (1) இன் படி 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி வழங்கப்படலாம்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றச்சாட்டுகள் முறையே , கடந்த செப்டம்பர் நடுப்பகுதியில் இரவு 10 மணிக்கும், கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி இரவு 11.15 மணிக்கும் அதே இடத்தில் பாதிக்கப்பட்டவரை உடல்ரீதியாக ஆபாசமாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14 (a) இன் கீழ் அவர் குற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, அதே சட்டத்தின் 14 வது பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் தடியடி தண்டனை விதிக்கப்படலாம்.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் RM8,000 ஜாமீன் வழங்கியதுடன்அவர் பாரிட் ஜாவா காவல் நிலையத்தில் தனது இருப்பை உறுதிப்படுத்தவும், பிணையில் வெளியே உள்ள காலப்பகுதியில் பாதிக்கப்பட்டவரை தொந்தரவு செய்யவோ அல்லது தொடர்பு கொள்ளவோ கூடாது என்று நிபந்தனையும் விதித்தது.
பின்னர் வழக்கின் குறிப்பு, ஆவணங்களை சமர்ப்பித்தல் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் வழக்கறிஞரை நியமிக்க நவம்பர் 16 ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.