BIG BOSS வீட்டிற்குள் புகுந்து போட்டியாளரை கைது செய்து வனத்துறை அதிரடி

‘Big Boss’ தொலைக்காட்சி நிகழ்ச்சிப் போட்டியாளர்களில் ஒருவரை இந்தியாவின் கர்நாடக மாநில வனத்துறை கைது செய்துள்ளது.

கன்னட ‘பிக் பாஸ் 10’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள வர்த்தூர் சந்தோஷ், கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியில் புலிநகம் பொருத்தப்பட்டிருந்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது.

வனத்துறை அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் புகுந்து சந்தோஷை வனத்துறையினர் கைதுசெய்தனர்.

காட்டு உயிர்ப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதாக சந்தோஷ்மீது புகார் பதியப்பட்டுள்ளது. புலிநகம் பொருத்தப்பட்டிருந்த நகையும் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here